இறை தூதரின் தோழரின் உயர்ந்த பண்புகளையும் தரத்தையும் பிரதிபலித்து காட்டுகிற நூல். குறிப்பாக வசதி படைத்தவர்கள் இதனை படிப்பது, அவர்களுடைய இம்மை வாழ்வு சிறந்து மறுமை வாழ்வு ஏற்றம் உடையதாக அமைய உதவும். எண்ணி எண்ணி ஏங்கிய இதயம் என்ற தலைப்பு உள்ளத்தை நெகிழவைத்தது. அப்துர்ரஹ்மான் அவர்களை எனது உள்ளத்தில் ஆழ பதிய செய்த இந்த நூலை எளிய இனிய நடையில் தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள், பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்கள் முதற்கொண்டு மக்களை சென்று அடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஏகன் அருள்புரிவானாக.